விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்..
இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் ரகசியம் தெரிந்தும் அவர் அதிமுகவை விமர்சனம் செய்கிறார். கோவை தொகுதியில் அண்ணாமலை பெரும் தோல்வி என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் பேசுகையில், சில தலைவர்களின் சுய லாபத்திற்காக அதிமுக அழிந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவினர் பெரும்பாலனோர் பாஜகவை நோக்கி வருகின்றனர்.
நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக பொருத்தமாக இருக்கும். ஒரு சமயத்தில் எடப்பாடியை பிரதமர் மோடி அருகில் அழைத்து அமர வைத்தார். அப்படி இருந்தும் அங்கிருந்து இங்கு வந்து பாஜக கூட்டணியே வேண்டாம் வென்று கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி.
2024 தேர்தலில் அதிமுக 134 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளது. அதனை எப்போது நிறைவேற்றி தரப்போகிறார்.? கோவைக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். ஆனால் ஒரு எம்.பி கூட இல்லாமல் எப்படி எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதியை நிறைவேற்றுவார்?
கோவையில் 6 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டே வெறும் 17 சதவீதம் தான் வாக்கு பெற்றது அதிமுக. 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இல்லை. ஆனால் நாங்கள் 34 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். எடப்பாடி சரித்திரம் எல்லாருக்கும் தெரியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது விமர்சனத்தை முன்வைத்து செய்தியாளர்களிடம் பேசினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…