பாஜக மாநில நிர்வாகி வெட்டிக்கொலை! இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநில முழுவதும் போராட்டம் – அண்ணாமலை

annamalaibjp

குற்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநில முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என அண்ணாமலை அறிவிப்பு.

பூவிருந்தமல்லியில் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக மாநில நிர்வாகியுமான பி.பி.ஜி சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற சங்கரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

சங்கர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். பாஜக மாநில நிர்வாகி சங்கரை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. கொலை செய்யப்பட்ட சங்கர் பாஜக எஸ்.சி. எஸ்டி, மாநில பொருளாராக உள்ளார்.

பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்பது குற்ற சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநில முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்