பாஜக பந்த் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.! – கோவை வணிகர் சங்க தலைவர் கோரிக்கை.!

Default Image

பாஜக அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டமானது கோவை வியாபாரிகளையும் ,கோவை மக்களையும் வெகுவாக பாதிக்கும். – தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் கருத்து. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் வெடிப்பு தொடர்பாகவும், அதற்கான ஆளும் திமுக அரசு நடவடிக்கை குறித்து, திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பந்த் போராட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன் கூறுகையில் , ‘  பாஜக அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டமானது கோவை வியாபாரிகளையும் ,கோவை மக்களையும் வெகுவாக பாதிக்கும். ஆகவே பந்த் அறிவிப்பை பாஜக மீண்டும் பரீசிலனை செய்ய வேண்டும்.’ என கோரிக்கை வைத்து இருக்கிறார் .

பாஜக பந்திற்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று அவசரவழக்காக விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்