புதுச்சேரியை காப்பாற்ற பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மத்திய அரசுக்கு விரோதமாகவும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு விரோதமாகவும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய படி நேரு வீதி வழியாக பேரணியாக சென்று உள்ளனர். இந்த அமைதிப் பேரணியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த பேரணிக்கு பின்பதாக பேசிய முதல்வர் நாராயணசாமி அவர்கள் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும் அப்படி செய்தால்தான் புதுச்சேரியை காப்பாற்ற முடியும் என கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…