திமுகவை  கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் – பொன். ராதாகிருஷ்ணன்

Default Image
  • அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும்  திமுக சார்பில் பேரணி நடைபெறுகிறது.  
  • திமுகவை  கண்டித்து பாஜக சார்பில் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மத்திய  அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில்  அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி  நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,பாஜக கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் திமுக கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதை உணர்ந்து பிஜேபியில் அவர்கள் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

4 பேர் நினைத்து விட்டால் குடியுரிமை வழங்கி விட முடியாது என்றும், அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் .மாணவர், சிறுபான்மையினர் திமுகவின் பேச்சை நம்ப வேண்டாம். அவர்கள் நம் அப்பா, தாத்தா என்று நாம் தலைமுறையினரை ஏமாற்றி வந்தவர்கள்.இலங்கை தமிழர்கள் விருப்பம் என்னவோ அது படி நடக்கும்.மாணவர்கள் திமுகவை  நம்பி போராட்டம் நடத்தாமல் எங்களுடன் வாருங்கள். திமுகவை  கண்டித்து பாஜக சார்பில் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்