வரும் ஜூன்-22 ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை

Published by
அகில் R

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில், விஷச்சாராயம் அருந்தி 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் திமுக அரசை கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவரது க்ஸ் தலத்தில் இந்த சம்பவத்தை குறித்து மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.

அவர்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்”, என கூறி இருந்தார்.

Recent Posts

கனமழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்!!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன்…

8 hours ago

“துறையும் வளந்துருக்கு ..துறை அமைச்சரும் வளந்துருக்காரு”! – நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : ஆண்டுதோறும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள்…

10 hours ago

தவெக முதல் மாநாடு : பணிகளை தீவிரமாய் கண்காணிக்கும் தலைவர் விஜய்?

சென்னை : தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அனைவரது கண்ணும் விழுப்புரம் விக்ரவாண்டியை நோக்கியே இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய…

10 hours ago

திடீர் உடல்நலக் குறைவு! அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

திருச்சி : தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், வயது முடித்தீர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்…

10 hours ago

“தமிழ்நாட்டின் ஒலிம்பிக்., முதலமைச்சர் கோப்பை.!” உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் என பலரும்…

11 hours ago

பெங்களூர் கட்டிட விபத்து : உயிரிழந்த இருவருக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பெங்களுருவில் உள்ள பாபுசாப் பாளையாவில்…

12 hours ago