கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்ட சபைக்குச் செல்கின்றனர்.
நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தாலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில்,கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது மே 2 ஆம் தேதி நடைபெற்றது,அதன்படி அதிமுக கூட்டணி சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நாகர்கோவில், திருநெல்வேலி,கோவை தெற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால்,பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
இதற்கு முன்னர்,2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,திமுக கூட்டணி சார்பாக 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக காரைக்குடி, மயிலாப்பூர்,தளி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 இடங்களில் வெற்றி பெற்றது.ஆனால்,அதன் பின்னர் நடைபெற்ற 2006,2011 மற்றும் 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…