எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன என நடிகர் சித்தார்த் ட்வீட்.
நடிகர் சித்தார்த் சமீப காலமாக சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தும் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நடிகர் சித்தார்த் சமீபத்தில் ஒரு பதிவில், ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும் என அவரது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதுபோல, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்டு அந்த பதிவினை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை போன்ற மிரட்டல்கள் போனில் வருவதாக கூறியுள்ளார். மேலும், தன்னை மிரட்டியவர்களின் கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன் என்றும் தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…