காதலியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் தலைமறைவாகியுள்ள பாஜக பிரமுகர் லால் சரண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வரக்கூடிய பாஜக பிரமுகர் லால் சரண் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், லால் சரண் அவரது காதலியான சட்டக் கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த பெண் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் லால் சரண் தலைமறைவாகிவிட்டார். இந்த செய்தி தெரிந்ததும் லால் சரணால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சட்டக்கல்லூரி மாணவி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பாஜக பிரமுகர் லால் சரண் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள லால் சரணையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…