மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம்.
பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், கடந்த ஆட்சியில் பால்விலை , மின்கட்டணம் உயர்ந்த போது, திமுக ஆட்சி சாலையில் இறங்கி போராடியது. பிறகு எப்படி இப்போது மட்டும் இதனை விலையேற்றுகிறார்கள். திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்களை அவதிப்பட வைத்துள்ளார்கள்.
கோடை காலத்தில் தான் மழைநீர் வடிகால் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் அதனை விடுத்து மழைநேரத்தில் அந்த பணியை ஆரம்பித்து காலம் தாழ்த்தி பணியை பாதியில் நிறுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறது.
மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. பணம் வரவில்லை என்று மறுப்பு சொல்ல முடியாது. இதனால் என்மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக பிரமுகர் பெண்களை பற்றி அவதூறாக பேசும்போது திமுக அமைச்சர் மேடையில் சசிரித்து கொண்டிருந்தார் என பல்வேரு குற்றசாட்டுகளை முன்வைத்தார் பாஜக பிரமுகர் குஷ்பூ.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…