பணம் வந்தால் போதும் என திமுகவினர் உள்ளனர்.! மக்களை பற்றி கவலையில்லை.! குஷ்பூ கடும் விமர்சனம்.!

Default Image

மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம்.

பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், கடந்த ஆட்சியில் பால்விலை , மின்கட்டணம் உயர்ந்த போது, திமுக ஆட்சி சாலையில் இறங்கி போராடியது. பிறகு எப்படி இப்போது மட்டும் இதனை விலையேற்றுகிறார்கள். திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்களை அவதிப்பட வைத்துள்ளார்கள்.

கோடை காலத்தில் தான் மழைநீர் வடிகால் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் அதனை விடுத்து மழைநேரத்தில் அந்த பணியை ஆரம்பித்து காலம் தாழ்த்தி   பணியை பாதியில் நிறுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறது.

மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. பணம் வரவில்லை என்று மறுப்பு சொல்ல முடியாது. இதனால் என்மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக பிரமுகர் பெண்களை பற்றி அவதூறாக பேசும்போது திமுக அமைச்சர் மேடையில் சசிரித்து கொண்டிருந்தார் என பல்வேரு குற்றசாட்டுகளை முன்வைத்தார் பாஜக பிரமுகர் குஷ்பூ.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்