ஒரு பேட்டியை கூட ஒழுங்காத பார்க்காத ஜெயக்குமார்.! பாஜக கரு.நாகராஜ் கடும் கடும் கண்டனம்.!

Jayakumar ADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பாஜக பிரமுகர் கரு.நாகராஜ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். இந்த பேட்டியால் அதிமுக தரப்பில் மிகுந்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார் அண்ணாமலை. இந்த கருத்து குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் நேற்று பேசுகையில், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார். அவர் மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர். அண்ணாமலையின் பேச்சு அதிமுக – பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்பது போல் இருக்கிறது. அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது. பாரம்பரியம் தெரியாது. என காரசார விமர்சனங்களை அண்ணாமலை மீது ஜெயக்குமார் முன் வைத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் ஜெயக்குமாருக்கு தனது கண்டன அறிக்கையை பதிவிட்டு உள்ளார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தமிழர்களின் நலனுக்காக மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசியலை சரி செய்ய வேண்டும் என உறுதியாக இருக்கிறார். பதவிக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு அவர் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலம் பெற வேண்டும் என கனவுகளோடு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு அதிமுகவுக்கு தான். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். இதில் யாருக்கும் பெரியண்ணன் வேலை கிடையாது என கரு நாகராஜன் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்