காவலரின் பாதுகாப்பை மீறி பாஜக பிரமுகர் பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அவரது பாதுகாப்பு காவலர் பிஎஸ்ஓ பாலகிருஷ்ணன் சித்தாதரிபேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவரது காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதனை பார்த்து ஓடிவந்த பிஎஸ்ஓ உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பாதுகாப்பு மற்றும் மக்கள் காவல்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத்தொடர்ந்து பாலசந்தரின் சகோதரி போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, பிரதீப், சஞ்சய், கலைவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் அவர்கள் கூறுகையில் குற்றம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமறைவானர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…