பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி.
சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு பற்றிய ஆயிசுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நீட் தேர்வினால் ஏழை எளிய மக்களுக்கான பாதிப்பு என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. நீட் பயிற்சி மையங்கள் பெரிய அளவிலான கட்டண வசூல். இதனால் வசதியற்ற மாணவர்கள் அந்த பயிற்சி மையங்களுக்கு போக முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் மாணவர் சமுதாயத்தை காப்பதற்கும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தான் மாண்புமிகு தமிழக முதல்வர் இந்த குழுவை அமைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது. எனவே பாஜகவும் அதிமுகவும் நீட் தேர்வு சம்பந்தப்பட்ட அவர்களின் தெளிவான முடிவினை இன்றைக்கு அறிவிக்க வேண்டும் என்று உங்களின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…