பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி.
சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு பற்றிய ஆயிசுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நீட் தேர்வினால் ஏழை எளிய மக்களுக்கான பாதிப்பு என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. நீட் பயிற்சி மையங்கள் பெரிய அளவிலான கட்டண வசூல். இதனால் வசதியற்ற மாணவர்கள் அந்த பயிற்சி மையங்களுக்கு போக முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் மாணவர் சமுதாயத்தை காப்பதற்கும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தான் மாண்புமிகு தமிழக முதல்வர் இந்த குழுவை அமைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் செயல்படுகிறது. எனவே பாஜகவும் அதிமுகவும் நீட் தேர்வு சம்பந்தப்பட்ட அவர்களின் தெளிவான முடிவினை இன்றைக்கு அறிவிக்க வேண்டும் என்று உங்களின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…