தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பாஜக அரசு மக்களின் துன்பங்களை அறிந்த அரசு. பெட்ரோல் விலையை குறைக்கும் தயாராக உள்ளோம் தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசலை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்று நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். சத்தியம் செய்கிறேன், பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…