அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்-தமிழக பாஜக தலைவர்  தமிழிசை

Default Image

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் என்று  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.

பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,  தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்  என்று  பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ்  தெரிவித்தார்.

Image result for திமுக  கூட்டணி

அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள்,மதிமுக என கட்சிகள் உள்ளது.

இந்நிலையில் கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்.கூட்டணி அமைவது தேவையானது; காலத்தின் கட்டாயம்;.வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை என்று  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்