பாஜக அரசியல் செய்யவில்லை சர்வாதிகாரம் செய்கிறது – குஷ்பு ..!

Default Image

உத்தர பிரதேசத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், நடிகர் தற்கொலை செய்து கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு தலித் பெண் கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கப்படவில்லை.

சம்பவத்தை திசை திருப்ப பாஜக அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். பாஜக தற்போது அரசியல் செய்யவில்லை சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறது என கூறினார்.

இந்த வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டித்தது வாய் திறக்காமல் தற்போது ஸ்மிருதி இராணி எங்கே போனார்..?நிர்மலா சீதாராமன் எங்கே போனார்..? ஹத்ராஸ் சம்பவம் குறித்து பாஜக பெண் எம்.பிக்கள் பேச மறுப்பது ஏன்.. என கேள்வி எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்