குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக-இப்ப என்ன போராட்ட வேஷமா.!வெட்கக்கேடு

Default Image

தமிழகம் முழுவதும் மழை பெய்து போனாதாலும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து தற்போது வற்றி வறண்டு வருகிறது.இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு திமுக தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக 1967ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிக்கப்படுள்ளது.  மதுரையில் உயர்நீதிமன்ற கிளை நீர்நிலையின் மீது கட்டப்படுள்ளது . இது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளார்

மேலும் காளை மற்றும் எருது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது, நெடுவாசல், மீத்தேன், நீட், கர்நாடகா காவிரியில் தமிழகத்தை கேட்காமல் அணைகள் கட்டியது, கச்சத்தீவை தாரை வார்த்தது இவை அனைத்தும் திமுக -காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தது.தற்போது போராட்ட வேஷமா.?என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்