3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை- கே.எஸ் அழகிரி..!

Default Image

தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாநகராட்சி வார்டில் 22, நகராட்சி வார்டில் 56,  பேரூராட்சிவார்டில்  230  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பாஜக தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  இந்நிலையில், தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது என்று ராகுல்காந்தி கூறியதை மக்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். நீட் தேர்வை ஆதரிக்கின்ற ஒரே கட்சியான பாஜகவுக்கு வாக்காளர்கள் உரிய பாடம் புகட்டி இருக்கிறார்கள். 10 மாவட்டங்களில் வெற்றி கணக்கையே தொடங்காத பாஜக , கைங்கரிங்ஸ் கட்சியோடு ஒப்பிட எந்த உரிமையும் இல்லை.

தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற  பாஜக எதிர்ப்பை எந்த காலத்திலும் அக்கட்சியால் எதிர்கொள்ள முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் முதலமைச்சருக்கு மக்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic