ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே வைக்கப்பட்ட கூட்டணி தான் பாஜக கூட்டணி  -அதிமுக எம்.பி. தகவல்

Default Image
  • அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே வைக்கப்பட்ட கூட்டணி தான் பாஜக கூட்டணி  என்று அதிமுக எம்.பி. அன்வர்ராஜா  தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

Image result for ANWAR RAJA MP

இந்நிலையில் பாஜக கூட்டணி தொடர்பாக அதிமுக எம்.பி. அன்வர்ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே வைக்கப்பட்ட கூட்டணி தான் பாஜக கூட்டணி .தேர்தல் காலத்தில் வைக்கப்படும் கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கு ஆகும் என்று அதிமுக எம்.பி. அன்வர்ராஜா  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்