மடியேந்திய ராதிகா.. மைக்கை பிடித்துக்கொண்ட சரத்குமார்.! கிழக்கு சீமையிலே vibes…

Published by
மணிகண்டன்

Election2024 : கிழக்கு சீமையிலே பட பாணியில் வாக்கு சேகரித்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் , அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் , நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும்  தனது கணவர் சரத்குமார் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

விருதுநகர் மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்,  வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், நான் இப்போது நீங்கள் சொல்வதை செய்யும் இடத்தில் இருக்கிறேன். திமுகவிடம் பிரதமர் வேட்பாளரே கிடையாது. அதிமுகவிடம் மத்திய மாநில அரசுகளுடன் எந்த தொடர்பும் கிடையாது.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதனை மாநில தலைவர் அண்ணாமலை மூலம் பிரதமரிடம் கூறி அதனை நிறைவேற்றுவேன். அதனால் தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகா ஏற்று நடித்து இருந்த விருமாயி கதாபாத்திர வசனத்தை கூற கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்று பேச தொடங்கிய ராதிகா, அருகில் இருந்த கணவர் சரத்குமாரிடம், மாமா இந்த மைக்கை பிடியுங்கள் என கூறி, பின்னர் மடியேந்தி, நான் உங்களுக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இன்னும் என்னிடம் உயிர் மட்டும் தான் இருக்கிறது. அத்தனையும் உங்களுக்காக கொடுப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

11 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

12 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

12 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

13 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

14 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago