பாஜக கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் முடிவு – எடப்பாடி பழனிசாமி!

Published by
கெளதம்

அதிமுக – பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அதிமுக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தல்களை எதிர்கொள்ள புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராகவும், முதல்வராகவும் ஏற்றுக்கொள்கின்ற கட்சிகள் கூட்டணி அமைக்க வரலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து இது பற்றி தான் வாய் திறக்கவில்லை என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன் என்று தெரிவித்தார்,

அதாவது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு தான். இது பொதுச்செயலாளரின் தனது தனிப்பட்ட முடிவு அல்ல என்று கூறி, அதிமுக – பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர்? மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என்று கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

3 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

7 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

7 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

8 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

9 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

9 hours ago