பாஜக கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் முடிவு – எடப்பாடி பழனிசாமி!

Published by
கெளதம்

அதிமுக – பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அதிமுக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தல்களை எதிர்கொள்ள புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராகவும், முதல்வராகவும் ஏற்றுக்கொள்கின்ற கட்சிகள் கூட்டணி அமைக்க வரலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து இது பற்றி தான் வாய் திறக்கவில்லை என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன் என்று தெரிவித்தார்,

அதாவது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு தான். இது பொதுச்செயலாளரின் தனது தனிப்பட்ட முடிவு அல்ல என்று கூறி, அதிமுக – பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர்? மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என்று கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago