மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை சந்திப்பில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் பிரச்சாரம் நடந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து பாஜகவினர் பிரச்சாரத்தில் அவர்கள் மீது விமர்சனம் செய்தனர். அப்போது திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் உருட்டு கட்டையால் பாஜகவினரை தாக்கியுள்ளார். பின்னர் இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை இருதரப்பினருக்கும் மோதலை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பாஜகவினர் அலங்காநல்லூர் – மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்ற பாஜகவினர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்ட விசிகவினரை உடனே கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் பாஜகவினர் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…