சர்வர் பிரச்சனை காரணமாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்தநிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை பதிவு செய்து, பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில், இணையதள சர்வரை சரி செய்யும் வரையில் பயோமெட்ரிக் முறையை ஒத்திவைக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தவகையில், இன்று காலை முதல் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் தங்களின் ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…