விரைவில் ஓசூரில் மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை.! 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் அமைகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிரமாண்டமான தொழிற்சாலையை ஓசூரில் அமைக்கிறது டாடா குழுமம். ஓசூரில் அமையவுள்ள மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயரிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படுவதால் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. ஐ-போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஐ-போன் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை 2 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 53,000 பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

ஃபாக்ஸ்கான், ஸ்பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஐ-போன்களை தயாரித்து வருகின்றன. தற்போது பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனம், ஓசூரில் தனது ஆலையை தொடங்குவதாக தகவல் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரமான ஓசூரில் பெரும் முதலீடு செய்கிறது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago