ஒகேனக்கல் அருகே 2 யானைகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் 2 யானைகள் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளது. அதில் போடூர் அருகே ஒரு ஆண் யானையும், கோடுபட்டி அருகே ஒரு பெண் யானையும் உயிரிழந்துள்ளது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியே வருவதால் யானைகள் உயிரிழப்பது என்பது அதிகமாகி வருகிறது.
இதையடுத்து, இரண்டு யானைகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் போடூர் அருகே உள்ள ஆற்றில் இறந்தநிலையில் கிடந்த யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், கோடுபட்டி அருகே இறந்த பெண் யானையை வனத்துறையினர் உதவியுடன் மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
தற்பொழுது, இந்த யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதா.? அல்லது சேற்றில் சிக்கி இறந்துள்ளதுள்ளதா.? என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்ததும் இது குறித்த உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மாரண்டஹள்ளியில் மின்சார வேலியை கடக்க முயன்ற மூன்று யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…