பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் பலர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருகை!

Default Image

பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் பலர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரானா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாகவே வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உட ல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவ நிர்வாகம் கூறியதையடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்து நேரில் வருமாறு கூறினர். தற்பொழுது எஸ்பிபி சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனைக்கு அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது எஸ்பிபி அவர்களின் நெருங்கிய நண்பராகியா  பாரதிராஜா அவர்களும் தற்பொழுது மருத்துவமனைக்கு வந்துள்ளார். இவர் தவிர பார்த்திபன் மற்றும் எஸ் பி பி யின் நெருங்கிய பழக்கம் உடைய இசையமைப்பாளர்கள் பலரும் மருத்துவமனைக்கு தற்பொழுது வந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்