பாரதி தாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு …!

Default Image

பாரதி தாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவிப்பு.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 75 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தொடர்ச்சியாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாரதிதாசன் பல்கலைகழகத்தின் தேர்வு கட்டண உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தேர்வுக்கு கொடுத்து வந்த கட்டணத்தையே தற்பொழுதும் கொடுக்கலாம் னவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்