பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி.! சாதுரியமிக்க அனுபவம் சக்கரவர்த்தி – முக ஸ்டாலின் இரங்கல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவெய்திய செய்தி துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன் என்று முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக திமுக தலைவர் முக ஸ்டாலின், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவெய்திய செய்தி துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். மேற்கு வங்கத்தில் குக் கிராமத்தில் உள்ள மண் வீட்டிலிருந்து ஜனாதிபதி மாளிகை என்ற சிகரத்தை திறமையாலும் உழைப்பாலும் எட்டியவர். எத்தகைய சிக்கல்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்கும் திறமையும் அசாத்திய துணிச்சலும் கொண்ட முதுபெரும் தலைவர். அவர்,  நிதியமைச்சராக இருந்தபோது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதி ஆன நிலையிலும் எனது வேண்டுகோளை ஏற்று நிதி ஒதுக்கி சென்னையின் குடிநீர் தேவையை தீர்க்க ஒத்துழைத்தனர்

தனது ஆரம்ப கால நண்பரான பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னணியில் நின்று ஆதரித்தார். என் 50 ஆண்டு கால நண்பர் கலைஞர், நவீன இந்தியாவை உருவாக்கிய முக்கிய தலைவர் என்றும் இந்தியா மற்றும்  தமிழ் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று கலைஞரின் இரண்டாவது நினைவு நாளில் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை எப்போதும் நினைவில் நிற்கும். அவர் குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

31 minutes ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

2 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

2 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

3 hours ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

4 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

6 hours ago