எஸ்.பி.பிக்கு பாரதராத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இவருக்கு சிலை அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என பலரும் முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதுபோல ஆந்திராவிலும் இவருக்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் எனவும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் எனவே தமிழக அரசு சார்பாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் நடைபெற்றது. அதுபோல எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முதல்வர் இது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…
சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …