எஸ்.பி.பிக்கு பாரதராத்னா : மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Default Image

எஸ்.பி.பிக்கு பாரதராத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இவருக்கு சிலை அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என பலரும் முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதுபோல ஆந்திராவிலும் இவருக்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் எனவும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் எனவே தமிழக அரசு சார்பாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் நடைபெற்றது. அதுபோல எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முதல்வர் இது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்