மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது தர கோரிக்கை..!

Default Image

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை.

தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 3-நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னையில் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சியை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் 4 மணி நேரத்தில் சென்றுவர முடியும் என்பதால் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவியுங்கள் என சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்