#BREAKING: பாரத் நெட் டெண்டர் ரத்து.! முதல்வர் பதிலளிக்க வேண்டும் – ஸ்டாலின்.!

Default Image

மத்திய அரசின் “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது.

திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தநிலையில், டெண்டர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் இன்று டெண்டரை ரத்து செய்தது.

பாரத் நெட் டெண்டர் தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல் அளித்த அமைச்சர் ஆர். பி உதயகுமார் பதவி விலகுவாரா..? பாரத் நெட் டெண்டர் திட்டம் ரத்து தொடர்பாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்