பாரத் நெட் டெண்டர் ரத்து ! அமைச்சர், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – உதயநிதி

Published by
Venu

முறைகேட்டுக்கு காரணமான அமைச்சர், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தநிலையில், டெண்டர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் இன்று டெண்டரை ரத்து செய்தது.

இந்நிலையில் இது குறித்து திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ரூ.1950 கோடி செலவில் 12,524 கிராமங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தர கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. திமுகவும் வழக்கு தொடர்ந்தது. எடப்பாடி அரசின் விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு டெண்டரை ரத்து செய்துள்ளது. கரடியே காறித்துப்பிய மொமன்ட்!கேன்சல் பண்ணிட்டீங்கள்ல, மறு டெண்டர் விட்டுக்குறோம்’ என இதை எளிதில் கடந்துபோகவிடக்கூடாது. முறைகேட்டுக்கு காரணமான அமைச்சர், அதிகாரி, நீதிமன்றத்தில் ‘முகாந்திரம் இல்லை’ என்ற லஞ்ச ஒழிப்புத்துறை.. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே மறுடெண்டர் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

12 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

13 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

14 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

16 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

16 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

17 hours ago