கொரோனா தொற்றால் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. ஹச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என தெரிவித்த அவர், இன்முகம்- பழகுவதற்கு இனியர், கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர் என தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியினருக்கும், வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…