#BREAKING: பி.இ சிறப்பு கலந்தாய்வு நாளை தொடக்கம்.. விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் -அமைச்சர் பொன்முடி ..!

Published by
murugan

ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் படிப்பில் சேர கடந்த அண்டை விட இந்த ஆண்டு 20,000 அதிகம், கடந்த  ஆண்டு தகுதியான விண்ணப்பம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 இந்த வருடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

 440 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 மொத்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற உறுப்புக் கல்லூரிகள் அனைத்து கல்லூரிகளும் இந்த இடங்கள் உள்ளடங்கியுள்ளது. எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.  சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளன. பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்கள் பலர் மருத்துவத்திற்கு சென்று விடுகின்றனர். இதனால் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பதற்காக ஐந்து முறை கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளேன்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அமலுக்கு வரும். செப்டம்பர் 18-ம் தேதி சேர்க்கை ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!  

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

13 minutes ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

1 hour ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

2 hours ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

3 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

3 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

4 hours ago