மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருங்கள் முதல்வர்

Published by
Rebekal

நிவர் புயல் காரணமாக புயலும் மழையுமாக இருப்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ள நிலையில், புதன்கிழமை புயல் காரைக்கால் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் குறித்துப் பல்வேறு மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் புதன்கிழமை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எனது தலைமையில் கடந்த 23 ஆம் தேதி ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது எனவும், ஏற்கனவே 18ஆம் தேதி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், 12ஆம் தேதி எனது தலைமையிலும், 21ஆம் தேதி மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையிலும் விரிவான ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றதாகவும் பேரிடர் காலங்களில் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கவும் 36 மாவட்டங்களுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 24ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கன மழையும் 25ஆம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை உடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இதனை எதிர் கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிவித்துள்ளார். மேலும் புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கக் கூடிய மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தனது அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago