MNM Leader Kamalhaasan says about South TN Flood relief [File Image]
அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் தென்மாவட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருவது போல பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
தற்போது பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் பல்வேறு இடங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. அதனை அறிந்து அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
அதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் மநீம தலைவர் கமல்ஹாசன், களத்தில் நேரடியாக உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறுகையில், சென்னையில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவியது போல, தென் மாவட்ட மக்களுக்கும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளனர். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உதவிக்கு தன்னார்வலர்கள் செல்லும் போது பாதுகாப்பாக திட்டமிடலுடன் செல்ல வேண்டியது அவசியம். அந்த திட்டமிடல் இல்லாததன் காரணமாகவே உதவிகள் திரட்ட இவ்வளவு தாமதமாகிறத. சரியான அதிகாரிகளிடம் முறையாக கலந்தாலோசித்து, திட்டமிட்டு உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும். உதவி செய்ய போகும் நபர்கள் ஆபத்தில் மாட்டிவிட கூடாது. பிறகு அவர்களை காப்பாற்ற இன்னொரு ஆள் வரும்படி செய்து விட கூடாது.
தற்போது தென்னகத்தில் நிலைமை சற்று சீராக உள்ளது. இருந்தும் உதவி தேவைப்படுவோருக்கு நாம் உதவ வேண்டும் என கூறினார். மேலும் அனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறினார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…