மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னம் வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் தங்களுக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் டார்ச் லைட் சின்னம் கோரிய போதும், அது வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த கட்சி டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளதால் தற்போது அந்த சின்னம் காலியாக உள்ளது.
அதனால் தங்களுக்கு அந்த சின்னத்தை ஒதுக்குமாறு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்த நிலையில், பிப்ரவரி 2-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…