17 வயது மாணவியை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர்!திடுக்கிடும் தகவல்!

Default Image
  • வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர்.
  • இதன் காரணமாக பரோட்டோ மாஸ்ட்டரை 5 பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியை அடுத்த இருதயபுரம் பகுதியை சேர்ந்தவர் பவுல் ராஜ் ஆவார்.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு 17 வயது மதிப்புள்ள ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளன்று பவுல் ராஜ் எங்கோ வெளியே சென்றுள்ளனர்.அவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்ட்டர் ஜான் ஜோசப் என்பவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் கதவை சாத்திய அந்த நபர் மாணவியை கட்டிலுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இங்கு நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் அழுது கொண்டிருப்பதை பார்த்து என்ன நடந்தது என கேட்டுள்ளன.அதற்கு அந்த மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது பரோட்டா மாஸ்ட்டர் ஜானை கைது செய்துள்ளனர்.மேலும் கைதான ஜானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்