சலூன், அழகு நிலையங்களுக்கு அனுமதி கிடையாது.!

Default Image

தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சலூன், அழகு நிலையங்களுக்கு அனுமதி கிடையாது.

நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் முடித்திருத்தகங்கள் செயல்படாமல் உள்ளது. இதனால் முடிதிருத்துவோர் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் முடித்திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்