கவனத்திற்கு!!மதியம் 2 மணி வரைக்கு தான்…வங்கிகள்.!அறிவிப்பு வெளியீடு

Published by
kavitha

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வங்கிகளின் வேலை நேரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வங்கிகள் அனைத்தும் மதியம்  2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தமிழக மாநில அளவிலான வங்கிகள் குழு அறிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பில் தெரிவித்துள்ள தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு, நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவுகிறது இவை வங்கிகளிலும் பரவாமல் இருக்க சரியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய அரசு சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டது. எனவே வங்கிகள்  வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதற்காக, பொது வணிக தொடர்ச்சி திட்டம் தற்போது நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்த குழு தமிழகத்தில் உள்ள வங்கிகள், அடுத்த அறிவிப்பு வரும் வரை, பணம் செலுத்துதல், பெறுதல், காசோலை பரிவர்த்தனை, அரசு பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் போன்றவைகளை எல்லாம் காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து வங்கிகளுக்கு சில அறிவுறுத்தலையும் அளித்துள்ளது அதன்படி

  • பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல், ஏ.டி.எம்., இயந்திரம், பணம் செலுத்தும் இயந்திரம் போன்ற சேவைகள், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • பெட்டிகளில் செலுத்தப்படும் காசோலைகள், ‘ஆன்லைன்’ பரிவர்த்தனைகள் போன்ற சேவைகளும் கிடைக்க, தேவையான ஏற்பாடுகளை எல்லாம் செய்ய வேண்டும்
  • ஊழியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, 50 சதவீத ஊழியர்கள் அலுவலகம் வரவும், மீதம்  உள்ளவர்கள் தங்களது வீட்டில் இருந்து பணி புரியவும், வங்கி கிளைகள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம்
  • கூட்டம் அதிகம் உள்ள வங்கிகள், தேவையெனில், போலீஸ் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
  • வைரஸ் பாதித்த பகுதிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, அரசு அறிவித்திருந்தால், அந்தப் பகுதி வங்கிகளை எல்லாம் அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை மூடலாம் என்று தெரிவித்துள்ளது.
  • மேலும் இது தொடர்பான அறிவிப்புகளை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். என்று குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Published by
kavitha

Recent Posts

‘நரகமே நடுங்குது பாரு’…வசூலில் மிரட்டும் தேவாரா! 3 நாட்களில் இவ்வளவா?

‘நரகமே நடுங்குது பாரு’…வசூலில் மிரட்டும் தேவாரா! 3 நாட்களில் இவ்வளவா?

சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…

7 mins ago

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

11 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

17 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

18 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

23 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago