தெற்கு ரயில்வேவிற்கு சொந்தமான ரயில்கள், ரயில்நிலையங்களில் பேனர் வைக்க தடை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரையை சார்ந்த பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் “உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி ரயில் நிலையங்களில் பேனர் மற்றும் கட்அவுட் வைத்து உள்ளதாகவும் ,இதனால் ரயில் பயணிகளுக்கு ,பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல் அவற்றை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நிதிபதிகள் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்தனர்.மேலும் தமிழக அரசு பேனர் வைக்க தடை விதித்துள்ளது. அதற்க்கு ரயில் நிலையங்கள் மட்டும் விதிவிலக்கல்ல என கூறினார்கள்.
தடையை மீறி பேனர் வைத்தால் ரயில்வே குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…