பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்கக்கூடாது என்று தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி, எண்ணெய்யை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக்கூடாது என்பதை மேற்கோள்காட்டி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய்கள் தயாரிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமையல் எண்ணெய்யின் தரத்தை ஆய்வு செய்வதற்கான எத்தனை ஆய்வகங்கள் உள்ளன என்றும் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர் விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் இருக்கின்றது என்ற விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் சில்லறையாக மற்றும் பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யை விற்கக்கூடாது என்று கூறி, இந்த வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…