தமிழகம் முழுவதும் தற்போது குடிமகன்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ, எப்போது பூரண மதுவிலக்கு வருமோ என தமிழகம் எதிர்பார்த்து வருகிறது. இந்த வேளையில் தங்கள் முன்னோர்கள் மது குடிக்க மாட்டோம் என கொடுத்த வாக்குறுதியை இன்னுமும் காப்பாற்றி வருகின்றனர்.
இந்த அதிசய கிராமம் இருக்கும் இடம் சிவகங்கை மாவட்டம். இந்த ஊரின் பெயர் ஆளவிளாம்பட்டி. இந்த ஊரில் குறிப்பிட்ட சமூகத்தினர் 170 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சமூகத்தினர் ராமசாமி – பொன்னழகி அம்மாள் தெய்வங்கள் கும்பிடுவார்கள். இந்த சமூகத்தின் முன்னோர்கள் ராமசாமி – பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் இனி தங்கள் வம்சத்தில் யாரும் மது அருந்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை தற்போது வரை உள்ள இளம் தலைமுறையினர் கடைபிடித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாட்டை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இதே போல இங்கு யாரும் வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. இவர்கள் முதன்மை தொழில் விவசாயம்தானாம். வானம் பார்த்த பூமியாக இருப்பதால் நிறைய இளைஞர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…