முக்கியச் செய்திகள்

கனமழை தொடரும்.. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

மழை நிலவரம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு வானிலை தகவல்களை தெரிவித்தார்.

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.!

அவர் கூறுகையில், தமிழக கடற்கரை பகுதியில் வரும் 26ஆம் தெற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், வரும் 27ஆம் தென்கிழக்கு அந்தமான் கடற்கரை பகுதியில் 55 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிருவுறுத்தப்டுகிறது.

வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் தமிழகத்தில் 28 செமீ பெய்துள்ளது. வழக்கமாக 32 செமீ அளவு வரையில் பெய்யும். அதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 சதவீதம் குறைவு.

வளிமண்டல சுழற்சியானது தமிழக பகுதியில் இருந்து கேரளாவை நோக்கி செல்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை தொடரும்.

வரும் 26ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும், அதிக கனமழை என்பது தற்போது கன்னியாகுமரி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் பெய்யும். அக்டோபர்,, நவம்பர் டிசம்பர் என்பது தான் வடகிழக்கு பருவமழை காலம்.

சென்னையை பொறுத்தவரையில், 41செமீ  மழை பெய்துள்ளது. வழக்கமாக 58 செமீ பெய்யும். அப்படி பார்த்தல், வழக்கத்தை விட 28 சதவீதம் குறைந்த அளவு மழை பெய்துள்ளது.  என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

31 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

52 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

56 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

1 hour ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

1 hour ago