‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்.
திருச்சியை சேர்ந்த சிவா, கார்த்திக் இருவரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘கடந்த ஜூலை 25 ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இணைந்து மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பீர் பாட்டிலால் சுரேசை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது பொய்யாக பதிவு செய்யப்பட்டதாகவும், கணக்கு காண்பிக்கும் நோக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம். இந்த வழக்கில் எங்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி மது அருந்தியதால் தான், இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக கூறி இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…