‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்.
திருச்சியை சேர்ந்த சிவா, கார்த்திக் இருவரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘கடந்த ஜூலை 25 ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இணைந்து மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பீர் பாட்டிலால் சுரேசை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது பொய்யாக பதிவு செய்யப்பட்டதாகவும், கணக்கு காண்பிக்கும் நோக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம். இந்த வழக்கில் எங்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி மது அருந்தியதால் தான், இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக கூறி இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…