டிடிஎப் வாசனுக்கு ‘நிபந்தனை’ ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி யூ-டியூப் பிரபலம்  டிடிஎப் வாசன் , காஞ்சிபுரம் அருகே  பாலுசெட்டிசத்திரம் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டும் போது முன் சக்கரத்தை தூக்கி விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது கை முறிவு ஏற்பட்டது. வாகனம் சேதமடைந்தது.

இந்த விபத்து தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருந்தனர். பின்னர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு  டிடிஎப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை எதிர்த்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு டிடிஎப் வாசன் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. காவல்துறை சார்பில், டிடிஎப் வாசன் விலையுயர்ந்த பைக், அதற்கான உடைகள் அணிந்து விபத்தில் சிக்கியதால் தற்போது நலமுடன் உள்ளார். ஆனால் அவரை பாலோ செய்யும் இளைஞர்கள் சிலர் தவறான பாதைக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது என ஜாமீன் வழங்க மறுத்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தார் டிடிஎப் வாசன். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும், தான் 40 நாட்களாக சிறையில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎப் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை அடுத்து டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தினமும் டிடிஎப் வாசன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 3 வாரம் கையெழுத்திட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

5 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

9 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

10 hours ago