தகாத உறவு..! பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி ..!

Published by
murugan

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு இவர் தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள ஒரு இரும்பு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
அதே கம்பெனியில் முருகன் என்பவரின் மனைவி பகவதி வேலை செய்து வந்துள்ளார்.  இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பகவதியின் கணவன் முருகனுக்கு தெரிந்து பகவதியை கண்டித்துள்ளார்.
பின்னர் பகவதி ரமேஷ் பாபுவிடம் பேசாமலும் , வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார். நேற்று வழக்கம் போல ரமேஷ்பாபு வேலைக்கு வந்துள்ளார். அப்போது பகவதி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு பகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷ் பாபுவை  துரத்தி சென்றுள்ளனர். அருகே உள்ள நன்செய் வயலில் ரமேஷ்பாபு ஓடிக்கொண்டிருக்கும்போது கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் கீழே விழுந்த ரமேஷ் பாபுவையும் , பகவதியும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமேஷ்பாபு இறந்துவிட்டார். ஆபத்தான நிலையில் பகவதிக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

56 mins ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

2 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

7 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

18 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

23 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

23 hours ago