பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
முந்தய காலத்தில் தான் பெண் குழந்தைகள் என்றால் கள்ளிப்பால் வைத்துக்கொல்வதும், தூக்கி வீசுவதும் நடந்து வந்தது. தற்போதைய காலங்களில் பலருக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லை. அதிலும் பிறக்கக்கூடிய குழந்தை என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று வளர்க்க கூடிய மனப்பான்மைதான் அதிகரித்திருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் தற்போதும் பெண் குழந்தைகள் என்றால் அபச குணமாகவும், வேண்டா வெறுப்பாகவும் நினைக்கக்கூடிய பெற்றோர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சாலை ஓரத்தில் பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் குழந்தையின் அழுகுரல் கேட்டு, உடனடியாக சென்று பார்த்த பொழுது குழந்தை இருந்ததை கண்டுள்ளார். இதனை அடுத்து அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் பிறந்து சில நிமிடங்களே ஆன இந்த பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற மனித மிருகம் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…